கோவை மாவட்ட கூடைபந்து கழகம் சார்பில் ஸ்டேட் சாம்பியன்ஷிப் போட்டிகள்

கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஸ்டேட் சாம்பியன்ஷிப் கூடைப்பந்து போட்டிகள் பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் அமைந்துள்ள கூடைப்பந்து உள்விளையாட்டு அரங்கம் மற்றும் சர்வஜனா பள்ளி வளாகத்தில் டிசம்பர் 15 முதல் 17-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 34 ஆண்கள் அணிகள் கலந்து கொண்டன.



இப்போட்டியின் அரையிறுதியில் முதல் பிரிவில் பி.எஸ்.சி. (BSC) அணியை எதிர்த்து ஒய்.எம்.சி.ஏ. அணி விளையாடியது. இதில் பி.எஸ்.சி. அணி 69 புள்ளிகள் பெற்றது. எதிர்த்து விளையாடிய ஒய்.எம்.சி.ஏ. அணி 65 புள்ளிகள் பெற்றது. இரண்டாவது போட்டியில் ரெனோவேட்டர்ஸ் அணியை எதிர்த்து யுனைடெட் அணி விளையாடியது. இதில் ரெனோவேட்டர்ஸ் அணி 63 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய யுனைடெட் அணி 50 புள்ளிகள் பெற்றது. 



தொடர்ந்து நடைபெற்ற இறுதிப் போட்டியில் பி.எஸ்.சி அணியை எதிர்த்து ரெனோவேட்டர்ஸ் அணி விளையாடியது. இதில் பி.எஸ்.சி அணி 77 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றது. தொடர்ந்து விளையாடிய ரெனோவேட்டர்ஸ் அணி 73 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தை பெற்றது. 



இதைத்தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கௌரவ விருந்தினராக தமிழ்நாடு மாநில கூடைப்பந்து கழக தலைவர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் à®†à®°à¯.ருத்ரமூர்த்தி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் ஜி.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். 

இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கோவை மாவட்ட கூடைபந்து கழகத்தின் சார்பில் துணைத் தலைவர் டி.பழனிச்சாமி, செயலாளர் ஆர்.சிரில் இருதயராஜ் மற்றும் சங்க உறுப்பினர்கள் செய்து இருந்தார்கள்.

Newsletter