ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டி : 2-வது ஆட்டம் சமன்

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற்ற ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டியில் மாவட்டம்-I மற்றும் மாவட்டம் -2 அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெற்ற ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டியில் மாவட்டம்-I மற்றும் மாவட்டம் -2 அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமனில் முடிந்தது.



மாநில அணிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படும் வகையில் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வரும் ரவுண்ட் ராபின் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இதில், சிறப்பாக விளையாடும் வீரர்கள் மாநில அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.



இந்த நிலையில், ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் மாவட்டம்-I மற்றும் மாவட்டம் -II அணிகள் பலப்பரிட்சை நடத்தின. முதலில் பேட் செய்த மாவட்டம்-II அணி சிவதேவனின் (49) பங்களிப்பினால் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத்தொடர்ந்து, பேட் செய்த மாவட்டம்-I அணிக்கு கே.சிபயேந்தால் அடித்த அரை சதத்தினால், முதல் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது.



இதைத்தொடர்ந்து, 2-வது நாளில் மாவட்டம்-I சிறப்பான ஆட்டத்தை வெஅலிப்படுத்தியது. 90 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஆட்டம் சமநிலை அடைந்தது.

Newsletter