தேசிய அளவிலான கார் பந்தயம் 2019 : சூப்பர் ஸ்டாக் பிரிவின் 2-வது சுற்றில் கர்நாடக வீரர்கள் முன்னிலை

கோவை : கோவை கரிமோட்டார் ஸ்பீடுவேயில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தயத்தின் சூப்பர் ஸ்டாக் பிரிவின் 2-வது சுற்றில் கர்நாடக வீரர்கள் முன்னிலை பெற்றனர்.

கோவை : கோவை கரிமோட்டார் ஸ்பீடுவேயில் நடைபெற்ற தேசிய அளவிலான கார் பந்தயத்தின் சூப்பர் ஸ்டாக் பிரிவின் 2-வது சுற்றில் கர்நாடக வீரர்கள் முன்னிலை பெற்றனர். 



கரி மோட்டார் ஸ்பீடுவேயில் நடைபெற்ற எம்.ஆர்.எஃப். எம்.எம்.எஸ்.சி. தேசிய அளவிலான கார் பந்தயப் போட்டிகள் 2-வது சுற்று நடைபெற்றது. இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில், வோக்ஸ்வோகன் மோட்டார் ஸ்போர்ட் பிரிவில் துருவ் ஷிவாஜி மோகித் முதலிடத்தையும், கார்த்திக் தரணி 2-வது இடத்தையும், அர்ஜுன் பாலு 3-வது இடத்தையும் பிடித்தனர். இதேபோல, வோக்ஸ்வோகன் ஏமியோ கிளாஸ் பிரிவில், ஐதராபாத்தின் ஜீட் ஜாபாக் முதலிடத்தையும், டெல்லியைச் சேர்ந்த அன்மோல் சிங் சாஹில் 2-வது இடத்தையும், மும்பையைச் சேர்ந்த சவுரவ் 3-வது இடத்தையும் பிடித்தனர். 



ஜுனியர் பிரிவில் வங்கதேசத்தின் ஐமான் சதாத், நாஷிக்கைச் சேர்ந்த விரஜ் ஜெய்ராஜ் மற்றும் பெங்களூரூவின் சேட்டன் சுரினேனி ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்தனர். சூப்பர் ஸ்டாக் சுற்றில் ரித்விக் தாமஸ், பிரதீக் பென்யா, ஆர். ராஜசேகர் ஆகியோர் முன்னிலை பெற்றனர். 

Newsletter