விடைபெற்றார் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பை நாயகன் யுவராஜ்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளார்.

40 டெஸ்ட் போட்டிகள், 304 ஒருநாள் போட்டிகள், 58 டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாடிய யுவராஜ் சிங், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஓய்வு குறித்து அவர் கூறியதாவது :- கிரிக்கெட் எனக்கு அதிகமாக கற்றுக் கொடுத்துள்ளது. போராட கற்றுக்கொடுத்தது. எப்போது எல்லாம் கீழே விழுந்தேனோ அப்போதெல்லாம் எழுந்து நிற்கவும், மீண்டும் முன்நோக்கி செல்ல ஊக்குவிப்பதாகவும் இருந்தது. 2011 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடியது மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. என ஓய்வு அறிவிப்பின் போது கூறினார்.

மேலும், இந்திய அணிக்காக 400-க்கும் அதிகமான போட்டிகளில் விளையாடியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் எனக் குறிப்பிட்டுள்ள யுவராஜ் சிங், 2011 உலக கோப்பையில் இலங்கைக்கு எதிராக சிறப்பாக விளையாடியதை மறக்க முடியாதது என்றும், 28 ஆண்டுகள் கழித்து உலக கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றதைவிட என்ன பெருமையிருக்கிறது, எனக் கேள்வி எழுப்பியுள்ளார். 

2011 உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக ஜொலித்த யுவராஜ்சிங்கின் இந்த ஓய்வு முடிவு, கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter