தேசிய அளவிலான வாலிபால் போட்டி : இறுதிப் போட்டியில் எஸ்.ஆர்.எம். மற்றும் பி.கே.ஆர் அணிகள் பலப்பரீட்சை

கோவை : தேசிய அளவிலான வாலிபால் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் எஸ்.ஆர்.எம். மற்றும் பி.கே.ஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

கோவை : தேசிய அளவிலான வாலிபால் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் எஸ்.ஆர்.எம். மற்றும் பி.கே.ஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 



சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கிராமப்புற கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் தென்னிந்திய அளவிலான மகளிர் வாலிபால் போட்டி நடந்து வருகிறது. கோவை மாநகராட்சியின் மைதானத்தில் நடந்து வரும் இந்தத் தொடரின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில், சென்னையைச் சேர்ந்த எஸ்,ஆர்.எம் கல்லூரி அணி, கேரளாவைச் சேர்ந்த செயிண்ட் மேரிஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது. 



பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் எஸ்,ஆர்.எம் அணி 3-1 (25:20,25:23,18:25,25:19) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.



இதேபோல, மற்றொரு அரையிறுதிப் போட்டியில் கோபிச் செட்டிபாளையத்தைச் சேர்ந்த பி.கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி 3-1 (22:25, 25:14,27:25,25:23) என்ற செட் கணக்கில் ஜி.கே.எம். வாலிபால் அறக்கட்டளை அணியை தோற்கடித்து இறுதிக்கு தகுதி பெற்றது. 



Newsletter