தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி : பேங்க் ஆப் பரோடா அணிக்கு தொடர் வெற்றி

கோவை : 54-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் இந்திய ரயில்வே அணியை வீழ்த்தி பேங்க் ஆப் பரோடா அணி 2-வது வெற்றியைப் பதிவு செய்தது.

கோவை : 54-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் இந்திய ரயில்வே அணியை வீழ்த்தி பேங்க் ஆப் பரோடா அணி 2-வது வெற்றியைப் பதிவு செய்தது. 



கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கத்தின் மைதானத்தில் 54-வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில், பேங்க் ஆப் பரோடா மற்றும் இந்திய ரயில்வே அணிகள் மோதின. 



இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை பெற்று அசத்தினர். இருப்பினும், ஒரு கட்டத்தில் முன்னிலைப் பெற்ற பேங்க் ஆப் பரோடா அணி 79-67 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம், இந்தத் தொடரில் தொடர்ச்சியாக 2-வது வெற்றியை பேங்க் ஆப் பரோடா அணி பதிவு செய்தது. 



இதேபோல, பெண்களுக்கான 18-து சி.ஆர்.ஐ. பம்ப் கோப்பைக்கான போட்டியில் நடப்பு சாம்பியனான கேரள மாநில மின்சார வாரிய அணி, 68-36 என்ற புள்ளிகள் கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்து சங்கம் அணியை தோற்கடித்து, முதல் வெற்றியைப் பெற்றது. 



Newsletter