தென்னிந்திய அளவிலான வாலிபால் போட்டி கோவையில் தொடக்கம்

கோவை : தென்னிந்திய அளவிலான வாலிபால் போட்டிகள் கோவையில் நேற்று தொடங்கியது.

கோவை : தென்னிந்திய அளவிலான வாலிபால் போட்டிகள் கோவையில் நேற்று தொடங்கியது. 



சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு கிராமப்புற கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் தென்னிந்திய அளவிலான மகளிர் வாலிபால் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை மாநகராட்சியின் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில், தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சிறந்த 6 அணிகள் பங்கேற்றுள்ளனர். லீக் மற்றும் நாக் அவுட் முறையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டியை கோவை வருமான வரித்துறை ஆணையர் வி.எஸ். குமார் தொடங்கி வைத்தார். 



முதல்நாள் போட்டியில், பி.கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி (கோபிச்செட்டி பாளையம்), செயிண்ட் மேரீஸ் கல்லூரி (வயநாடு), ஜி.கே.எம். வாலிபால் அறக்கட்டளை (சென்னை), செயிண்ட் ஜோசப் கல்லூரி (திருசூர்) ஆகிய அணிகள் முதல் லீக் போட்டிகளை விளையாடின. இதில், செயிண்ட் மேரீஸ் கல்லூரி அணி 3-1 என்ற செட் கணக்கில் பி.கே.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணியை தோற்கடித்தது. மற்றொரு போட்டியில், ஜி.கே.எம். வாலிபால் அறக்கட்டளை அணி 3-1 என்ற செட் கணக்கில் செயிண்ட் ஜோசப் கல்லூரியை வீழ்த்தி, முதல் வெற்றியைப் பதிவு செய்தது. 



Newsletter