தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி : நடப்பு சாம்பியனை தோற்கடித்தது தெற்கு ரயில்வே அணி

கோவை : சி.ஆர்.ஐ. பம்ப் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான கேரளா மாநில மின்வாரியத்துறை அணியை 48 - 42 என்ற புள்ளிகள் கணக்கில் தெற்கு ரயில்வே அணி வெற்றி பெற்றது.

கோவை : சி.ஆர்.ஐ. பம்ப் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டியில் நடப்பு சாம்பியனான கேரளா மாநில மின்வாரியத்துறை அணியை 48 - 42 என்ற புள்ளிகள் கணக்கில் தெற்கு ரயில்வே அணி வெற்றி பெற்றது.



சி.ஆர்.ஐ. பம்ப் கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி கோவை கூடைப்பந்து சங்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இதன் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான கேரளா மாநில மின்வாரியத்துறை அணியும், தெற்கு ரயில்வே அணியும் பலப்பரீட்சை நடத்தின. 



இதில், இரு அணி வீராங்கனைகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருப்பினும், தெற்கு ரயில்வே அணி தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. இறுதியில், தெற்கு ரயில்வே அணி 58-52 என்ற புள்ளிகள் கணக்கில் நடப்பு சாம்பியனான கேரள மின்வாரியத்துறை அணியை வீழ்த்தியது. 



இதேபோல, ஆண்களுக்கான 54-வது நாச்சிமுத்து கவுண்டர் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் ஏர் ஃபோர்ஸ் அணியும், கோவை மாவட்ட கூடைப்பந்து அணியும் மோதின. இதில், இந்தியன் ஏர் ஃபோர்ஸ் அணி 71 - 58 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.

Newsletter