மாவட்ட அளவிலான டி20 கிரிக்கெட் போட்டி : இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணி வெற்றி

கோவை : கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டி20 கிரிக்கெட் போட்டித் தொடரில் விஜய் கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 77 ரன்கள் வித்தியாசத்தில் இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணி வெற்றி பெற்றது.

கோவை : கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான டி20 கிரிக்கெட் போட்டித் தொடரில் விஜய் கிரிக்கெட் கிளப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 77 ரன்கள் வித்தியாசத்தில் இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணி வெற்றி பெற்றது. 

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா மில்ஸ் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. நாக்-அவுட் முறையில் நடந்து வரும் இந்தப் போட்டித் தொடரில் மொத்தம் 40 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இந்த நிலையில், சி.ஐ.டி. கல்லூரி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் விஜய் கிரிக்கெட் கிளப் மற்றும் இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணிகள் மோதின. இதில், முதலில் பேட் செய்த இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணி, மணி பாரதி (51*), எஸ். ஜெனார்த்தன் (40) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் சேர்த்தது. 



இதைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய விஜய் சி.சி. அணியின் வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். குறிப்பாக, எஸ். மோகன்ராஜின் சுழலில் அந்த அணியின் வீரர்கள் சிக்கினர். இதனால், 13.5 ஓவர்களில் விஜய் சி.சி. அணி வெறும் 61 ரன்களை மட்டுமே குவித்தது. இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணியின் சார்பில் எஸ். மோகன் பிரசாத் 6 விக்கெட்டுகளும் (6 ரன்கள்), ராஜசேகர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம், இ.ஏ.பி. கிரிக்கெட் அகாடமி அணி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. 



இதேபோல, காலிறுதி சுற்றுக்கு முந்தை சுற்றுப் போட்டி ஒன்றில், மக்மா சி.சி. (66 ரன்கள்) அணியை ராஜசேகர் மணி நினைவு கிரிக்கெட் கிளப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் தோற்கடித்தது.

Newsletter