தேசிய கூடைப்பந்து போட்டி : தமிழ்நாடு பெண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

கோவை : 36-வது தேசிய கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு பெண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

கோவை : 36-வது தேசிய கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு பெண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.



16 வயதுக்குட்பட்டவர்களுக்கான 36-வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில், ஆரம்ப முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும், தமிழ்நாட்டு பெண்கள் அணி காலிறுதி ஆட்டத்தில் டெல்லியை எதிர்கொண்டு விளையாடியது. லீக் போட்டிகளில் தோல்வியையே சந்திக்காத அணியாக வலம் வரும் தமிழ்நாடு அணி, டெல்லியை சந்தித்தது. இதில் வழக்கம்போல, ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழ்நாடு வீராங்கனைகள் அடுத்தடுத்து புள்ளிகளை குவித்தனர். 



இதனால், 90-61 என்ற புள்ளிகள் கணக்கில் டெல்லியை தோற்கடித்தது. தமிழக அணியில் அதிகபட்சமாக, சந்தியா 16 புள்ளிகளும், நிவேதாஶ்ரீ 15 புள்ளிகளும், சத்யா 14 புள்ளிகளும் குவித்தனர். நாளை நடைபெறும் அரையிறுதி போட்டியில் தமிழக அணி ராஜஸ்தானை எதிர்கொள்கிறது.

இதேபோல, பஞ்சாப் - மகாராஷ்டிரா அணியையும், ராஜஸ்தான் - கர்நாடகா அணியையும் வீழ்த்தியது. ஆண்கள் பிரிவில், கேரளா, ராஜஸ்தான் மற்றும் கர்நாடகா அணிகள் நாளை நடக்கும் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

Newsletter