தேசிய கூடைப்பந்து போட்டி : தமிழக பெண்கள் அணி காலிறுதிக்கு தகுதி

கோவை : கோவையில் நடைபெற்று வரும் தேசிய கூடைப்பந்து போட்டியில் தமிழக பெண்கள் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

கோவை : கோவையில் நடைபெற்று வரும் தேசிய கூடைப்பந்து போட்டியில் தமிழக பெண்கள் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.



16 வயதுக்குட்பட்டவர்களுக்கான 36-வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில், ஆரம்ப முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும், தமிழ்நாட்டு பெண்கள் அணி, நேற்று நடந்த தனது கடைசி லீக் போட்டியில் கர்நாடகா அணியை எதிர்கொண்டு விளையாடியது. 



ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக அணி 52-36 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. 16 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி கால்இறுதிக்கு தகுதி பெற்றது. இதேபோல, பஞ்சாப் - சத்தீஸ்கர் அணியையும், தெலுங்கானா - பீகார் அணியையும் தோற்கடித்தது.

Newsletter