36-வது கூடைப்பந்து போட்டி : தமிழ்நாடு மகளிர் அணிக்கு ஹாட்ரிக் வெற்றி

கோவை : கோவையில் நடந்து வரும் 36-வது கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு பெண்கள் ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

கோவை : கோவையில் நடந்து வரும் 36-வது கூடைப்பந்து போட்டியில் தமிழ்நாடு பெண்கள் ஹாட்ரிக் வெற்றி பெற்றது.



16 வயதுக்குட்பட்டவர்களுக்கான 36-வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில், ஆரம்ப முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும், தமிழ்நாட்டு பெண்கள் அணி, நேற்று நடந்த தனது 3-வது லீக் போட்டியில் உத்தரபிரதேசம் அணியை எதிர்கொண்டு விளையாடியது. ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக அணி 86-68 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று, ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது. சத்யா, சந்தியா ஆகியோர் தல 18 புள்ளிகளைப் பெற்று அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். இதேபோல, குஜராத் - அஸ்ஸாம் அணியையும், மகாராஷ்டிரா - மத்திய பிரதேசம் அணியையும் வீழ்த்தியது. 



ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் ராஜஸ்கான் அணி 59-55 என்ற புள்ளிகள் கணக்கில் கேரள அணியை த்ரில் வெற்றி பெற்றது. இதேபோல, குஜராத், ஹரியானா அணிகள் வெற்றி பெற்றன.

Newsletter