36-வது தேசிய கூடைப்பந்து போட்டி : நடப்பு சாம்பியன் பஞ்சாபை வீழ்த்தி ராஜஸ்தான் பெண்கள் அணி அபாரம்

கோவை : கோவையில் நடந்து வரும் 36-வது தேசிய கூடைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் பஞ்சாபை 7 புள்ளிகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது.

கோவை : கோவையில் நடந்து வரும் 36-வது தேசிய கூடைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் பஞ்சாபை 7 புள்ளிகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோற்கடித்தது.



16 வயதுக்குட்பட்டவர்களுக்கான 36-வது தேசிய கூடைப்பந்து போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில், 67-60 என்ற புள்ளிகள் கணக்கில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. ரஷி ஹோத்தானி 31 புள்ளிகள் பெற்று அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.



ஏற்கனவே, இந்த சீசனில் நடப்பு சாம்பியன் பஞ்சாபை வீழ்த்தியிருந்த கேரள அணி, 73-45 என்ற புள்ளிகள் கணக்கில் சண்டிகரை தோற்கடித்து 2-வது வெற்றியை பதிவு செய்தது. மற்றொரு போட்டியில் மேற்கு வங்க அணி 69-54 என்ற கணக்கில் பீகாரை வீழ்த்தியது.



இதேபோல, ஆண்கள் பிரிவில், கர்நாடகா, ஹரியானா, ஜம்மு காஷ்மீர் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன. 

Newsletter