10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யக்கோரி த.பெ.தி.க-வினர் ஆட்சியரிடம் மனு


தமிழகத்தில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்யக்கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சிறை கதவுகளுக்கு பின்னர் கைவிலங்கு அணிந்து இருப்பது போல நூதன முறையில் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்திற்கு அவ்வமைப்பினர் சிறைவாசிகளின் நிலையை சித்தரிக்கும் வகையில் சிறை கதவுகளுக்குள் இருப்பது போல சித்தரிக்கும் வகையில், சிறை கதவுகளுடன் கைவிலங்கு அணிந்தபடி வந்தனர். 

கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆயுள் தண்டனை கைதிகள் பத்து ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவதாகவும், ஆனால் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கைதிகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடி வருவதாகவும் த.பெ.தி.க-வினர் குற்றம் சாட்டினர். 

கடந்த காலங்களில் தலைவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டது போல, பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனவும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரரிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர். 

சிறை கதவுடன் கைவிலங்கிட்டபடி மனு அளிக்க வந்தவர்களால் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...