கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது. குடிநீர், சாலை, சுகாதாரம், தெருவிளக்கு பணிகளில் மக்கள் குறைகளுக்கு உடனடி தீர்வு காண அறிவுறுத்தப்பட்டது. அமைச்சர் சீரநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.


Coimbatore: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, கோயம்புத்தூர் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இன்று (27.06.2026) நடைபெற்றது.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் 5 மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த விரிவான ஆய்வு இக்கூட்டத்தில் நடைபெற்றது.



கூட்டத்தில் பேசிய அமைச்சர் வி.சம்பத்குமார், குடிநீர் திட்டப் பணிகள், சாலை பணிகள், சுகாதார தூய்மை பணிகள் மற்றும் தெருவிளக்குகள் சம்பந்தமாக பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார். அடிப்படை வசதிகளான இவற்றில் குறைகள் ஏதுமின்றி சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.



26.06.2026 அன்று மேற்கு மண்டலம், வார்டு எண் 75-க்கு உட்பட்ட சீரநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள வாய்க்காலில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அமைச்சர் திடீர் ஆய்வு செய்து, சரிசெய்திட அறிவுறுத்தினார். பின்னர், வார்டு எண் 40-க்குட்பட்ட தொண்டாமுத்தூர் சாலை, வீரகேரளம் பகுதியில் கிருஷ்ணம்பதி குளத்திற்கு செல்லும் வாய்க்கால் பகுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை ஆணையாளர்கள் த.குமரேசன், ர.சரஸ்வதி, மாநகர தலைமை பொறியாளர் விஜயகுமார், நகர் நல அலுவலர் Dr.சுபாஷ் காந்தி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...