எல்.ஐ.சி காலனியில் கதவை உடைத்து நகை மற்றும் பணம் திருட்டு

கோவை எல்.ஐ.சி காலனியை சேர்ந்தவர் வித்யா ராமசாமி. இவரது கணவர் ராமசாமி காசியாபாத் சிண்டிகேட் வங்கியில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். வித்யா ராமசாமி பொள்ளாச்சி எல்.ஐ.சி யில் உயர் நிலை உதவியாளராக பணி புரிந்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல பணிக்கு சென்று விட்டு மதியம் வீடு திரும்பிய வித்யா ராமசாமி வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதன் உள்ளே வைக்கபட்டிருந்த 80 பவுன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இது குறித்து அவர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார். அங்கு வந்த போத்தனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இக்கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.





Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...