பணவர்த்தக சேவை மின்னணு மற்றும் இணையதளத்தின் மூலம் எவ்வாறு செயல்படுகிறது என ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்

கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் தேசிய அளவிலான "பணவர்த்தக சேவை மின்னணு மற்றும் இணையதளத்தின் மூலம் எவ்வாறு செயல்படுத்துவது" என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கினை அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள கிளைய்ட்டான் மாநில பல்கலைக் கழகத்தின் மேலாண்மைத் துறையின் தலைவர் முனைவர் அவிநந்தன் முகர்ஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.

இக்கருத்தரங்கில் இணையதளம் மற்றும் மின்னணுவின் மூலம் பணபரிவர்த்தனை எவ்வாறு சிறப்பாக செய்வது, இதன் முகியத்துவத்தினை பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் எடுத்துரைப்பது குறித்து 85 ஆய்வுக் கட்டுரைகளை இந்தியாவில் இருந்து பல்வேறு வர்த்தக நிபுணர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் சமர்ப்பித்திருந்தனர். இவையனைத்தும் புத்தக வடிவில் வெளியிடப்பட்டது.



மேலும், இந்நிகழ்ச்சியில் எலைகா வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனம், மும்பை நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர் கஜேந்திர கோத்தாரி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, இக்கருத்தரங்கினை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமையேற்று துவக்கி வைத்தார். முதன்மை நிர்வாக அலுவலர் எஸ்.சுந்தரராமன் கருத்தரங்க அறிக்கையினை வாசித்தார். கல்லூரி முதல்வர் பி.பாபாஞானகுமார் வரவேற்புரையாற்றினார்.



வணிகவியல் துறைகளின் தலைவர் சுமதி, அன்புமலர், சந்தானலட்சுமி, விஜிமோல் உள்ளிட்டு பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் இந்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...