ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியின் சார்பில் கணினி கருத்துப்பரிமாற்றம், தகவல் பரிமாற்றத்திற்கான அகில உலக கருத்தரங்கம்

கோவையில் செயல்பட்டு வரும் ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 2017ஆம் ஆண்டில் கணினி கருத்துப்பரிமாற்றம் மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான அகில உலக கருத்தரங்கம் வியாழனன்று (இன்று) அக்கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்டது.

இதில் பங்குபெற இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பிஜி, சீனா, ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் பல நாடுகளில் இருந்து 782 ஆய்வு ஏடுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் 124 ஆய்வு ஏடுகள் தேர்வு செய்யப்பட்டன.



தொடக்கத்தில் கல்லூரியின் முதல்வர் நடராஜன் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் தாளாளர் முனைவர் எஸ்.தங்கவேலு இணையதளம் எவ்வாறு அனைத்து துறைகளிலும் பயன்படுகிறது என்பது குறித்து சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற க்யன்மெட்ரிஸ் நிர்வாக இயக்குநர் ராஜன் பரசுராமன், மிகை யதார்த்தம் பற்றியும், அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்தும் எடுத்துரைத்தார். மேலும், தொடர்பு திறனும், அதை மேம்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்தல் மிகவும் இன்றியமையாதது என கூறினார்.

இதைத்தொடர்ந்து, நிலைப் பொருள் அபிவிருத்தி, ஐபிஎம் இந்தியா மென்பொருள் ஆய்வக அமைப்புக் குழுவைச் சேர்ந்த கதிரவன் வேலுசாமி பேசுகையில், மென்பொருள் அலுவலகத்தின் பணியாற்ற நிர்வாக திறன் மற்றுமல்லாமல் சிக்கல் தீர்க்கும் திறன் மிகவும் அவசியம் என்று கூறினார். மேலும், நம் தனிப்பட்ட வாழ்க்கையில் பழக்கவழக்கங்கள், உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஒன்றிணைந்து இருத்தல் வேண்டும் என கூறினார்.

இதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களால் கருத்தரங்கப் புத்தகம் வெளியிடப்பட்டது. நிரைவாக, தகவல் தொடர்பு துறை தலைவர் பிரகாஷ் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியினை நிரைவு செய்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...