பெண்களிடம் தரக்குறைவாக நடந்துவரும் மைக்ரோ பைனான்ஸ் மீது நடவடிக்கை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்


பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் தவனை செலுத்த அவகாசம் கேட்ட பெண்களிடம் அவமரியாதையாக பேசிய மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள் பத்து பேர், இருபது பேர் என்று மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் பெற்று மாதமாதம் தவனை செலுத்தி வருகின்றனர். 

இதனிடையே, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இதுவரை முறையாக பணத்தை கட்டிய கடன் பெற்ற பெண்கள் தற்போது உரிய தேதியில் பணத்தை கட்ட முடியாமல் சிரமப்படுவதால் உரிய நேரத்தில் செலுத்த முடியாத சூழல் உள்ள நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் பணத்தை செலுத்தியே ஆகவேண்டும் என்று அருவருக்கத்தக்க வார்த்தைகளில் பேசுவதாக கூறி கடன் பெற்ற பெண்கள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டு, மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது மீண்டும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் பெண்களிடம் தரக்குறைவாக பேசியதாகவும் சட்ட ஒழுங்கை சீர்குலைக்கும் விதத்தில் பேசி வருகிற மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் இணைந்து பெண்கள் இன்று தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...