தவறான வதந்திகளை பரப்பும் செய்தியாளர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், வடவள்ளி பகுதிகளைச் சேர்ந்த தொழுநோயால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு உதவி செய்து வரும் சுகாதார மையம் குறித்து தவறான வதந்திகளை பரப்பும் செய்தியாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

தொழு நோயால் பாதிக்கப்பட்ட நாங்கள் சுமார் 125 குடும்பத்தினர் தங்களது குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்டு கோவை வடவள்ளி அருகே கடந்த 40 வருடமாக வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் பகுதியின் அருகில் தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுககு உதவி செய்யும் வகையில் கிராம சமூக சுகாதார மையம் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.

அந்த மையத்தின் மூலமாக எங்களுக்கு மாதந்தோறும் உணவுப் பொருட்கள், மருத்துவ வசதி மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு படிப்பு வசதி அனைத்தும் தற்போது வரை செய்துவருகிறார்கள்.

தற்போது எங்களுக்கு உதவி செய்யும் சுகாதார மையத்தின் மீது வி.சியாம் என்பவர் தவறான வதந்திகளை செய்தி பத்திரிகையிலும் மற்றும் சமூக வலைதளத்திலும் பரப்பி உள்ளார். இதனால், 125 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆகவே, சியாம் மீதும், அந்த செய்தி பத்திரிகை நிருபர் மீதும் கோவை மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...