விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என தி இந்து வாசகர் திருவிழாவில் சசிகுமார் பேச்சு

தி இந்து தமிழ் நாளிதழின் நான்காம் ஆண்டு துவக்கத்தினை முன்னிட்டு இன்று (டிச. 4) கோவையில் வாசகர் திருவிழா நடைபெற்றது. 



கோவை, நவஇந்தியா அருகே அமைந்துள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர், இயக்குநர் பாரதி கிருஷ்ணன், திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் எம்.சசிகுமார், சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன், ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கே.ஆர்.நாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.



கோவை மட்டுமல்லாது திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் என பல பகுதிகளில் இருந்தும் தி இந்து நாளிதழ் வாசகர்கள் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இதைத்தொடர்ந்து, திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் எம்.சசிகுமார் பேசியதாவது:-



தி இந்து நாளிதழ் மக்கள் மத்தியில் தனி தடம் பதித்து உள்ளது. வாசகரின் மனநிலைக்கு ஏற்ப ஒரு செய்தியினை கொண்டு சென்று சேர்ப்பதில் சிறப்பை பெற்றது தி இந்து. 

நாம் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். நாட்டின் பொருளாதார கட்டமைப்பில் விவசாயிகள் பெரிய சிரமங்களை சந்தித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு தேவையானதை நாம் தான் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். வாசகர்கள் விவசாயிகளின் வாழ்க்கை முன்னேற உதவ வேண்டும்'' என்றார்.



இதைத்தொடர்ந்து, வாசகர்கள் மற்றும் சசிகுமாருக்கு இடையே சிறிது நேரம் கேள்வி- பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாசகர்கள் கேட்ட கேள்விகளுக்கு சசிகுமார் பதிலளித்தார். அப்போது, திரைக்கதையில் காண்பிக்கப்படும் வன்முறை சம்பவங்கள் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதை தடுக்கவும் குறைக்கவும் மேற்கொள்ள வேண்டியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...