காலணி அருந்ததால் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி

ஈஷா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி மும்பையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது, கோவை விமான நிலையத்தில் அவரது காலணி அருந்ததால் விமான நிலையத்தில் பேட்டிக்காக கூடியிருந்த பத்திரிகையாளர் சந்திப்பை அவர் தவிர்த்துச் சென்றார்.

கோவை மாவட்டத்தில் செயல்படும் ஈஷாவில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்பதற்காக மத்திய பாஜக ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி சனிக்கிழமையன்று (இன்று) விமானம் மூலம் கோவை வந்தார். அப்போது  கோவை விமான நிலையத்தில் அவர் அணிந்திருந்த காலணி அருந்ததைத் தொடர்ந்து, ஒரு கால் செருப்புடனும், மற்றொரு கால் செருப்பில்லாமலும் விமான நிலையத்தின் உள்ளே இருந்து வெளியே நடந்து வந்தார்.

அப்போது, அங்கு பத்திரிகையாளர்கள் கூடியிருந்தும் அவர்களுடனான சந்திப்பை தவிர்த்து கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் புறப்பட்டார். 

இதைத்தொடர்ந்து, ஈஷா யோகா மையம் செல்லும் வழியில் பேரூர் பகுதியில் காரை நிறுத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, அங்கிருந்த செருப்பு கடைக்கு சென்று தனது செருப்பை தைத்தார். பின், செருப்பு தைத்ததற்கான கூலியாக 100 ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால் கடைக்காரரிடம் 100 ரூபாய்க்கு சில்லறை இல்லாததால் மீண்டும் செருப்பை வாங்கி கூடுதலாக 2 தையல்கள் இட்டு கொடுத்துள்ளார்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்ட ஸ்மிருதி இராணி, ஈஷா நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

இதனிடையே, பலத்த பாதுகாப்பு வாகனங்களுடன் சென்ற மத்திய அமைச்சர் திடீரென சாலையோரம் காரை நிறுத்தி அங்கிருந்த கடைக்குச் சென்று சாதாரண இருக்கையில் அமர்ந்ததால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...