கோவை-பெங்களூர் இடையிலான சிறப்பு இரயில் சோதனை ஓட்டம் விரைவில் துவக்கப்படும்


கோவை-பெங்களூர் இடையிலான சிறப்பு இரயில் சோதனை ஓட்டம் விரைவில் துவக்கப்படும் என சேலம் கோட்ட இரயில்வே மேலாளர் ஹரி சங்கர் வெர்மா தெரிவித்துள்ளார்.



கோவை இரயில் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சேலம் கோட்ட இரயில்வே மேலாளர் ஹரி சங்கர் வெர்மா கூறியதாவது:- 

கோவை ரயில் நிலையத்தில் இட நெருக்கடியை தவிர்க்க பல அடுக்கு நான்கு மற்றும் இரு சக்கர வாகன நிறுத்த வசதிகள் 2 கோடி மதிப்பீட்டில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இந்த பணிகள் மூன்று அல்லது நான்கு மாதத்தில் துவக்கப்படும். கோவை- பெங்களூர் இடையிலான இரவு நேர இரயில் சேவை குறித்து இரயில்வே நிர்வாகம் முடிவு செய்யும்.

மத்திய இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அறிவித்த கோவை- பெங்களூர் இடையேயான சிறப்பு இரயில் சோதனை ஓட்டம் விரைவில் துவங்க திட்டப்பட்டுள்ளது. மேலும், போத்தனூர்- பொள்ளாச்சி அகல இரயில் பாதை திட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வருகின்ற மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் பிரச்சனையில் தென்னக இரயில்வே ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, 10 ஆயிரம் ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டு உள்ளது. கோவை இரயில் நிலையத்தில் குறுக்கலாக உள்ள முதலாவது நடைமேடை அகலப்படுத்தப்படும். சுரங்க நடைபாதை, லிப்ட், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட பயணிகளுக்கான வசதிகள் விரைவில் செயல்பாட்டிற்கு வரும்'' என ஹரி சங்கர் வெர்மா தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...