மருதமலை கோவிலில் எம்.ஏ.சின்னப்பதேவர் உருவப் படத்தை பொறிக்க இந்து மக்கள் கட்சி மனு

மருதமலை முருகன் கோவிலின் மண்டபத்தில் சாண்டோ எம்.ஏ.சின்னப்ப தேவரின் உருவப் படத்தினை வைக்க வேண்டும் எனக் கோரி இந்து மக்கள் கட்சியின் கோவை மாவட்ட நிறுவனர் மற்றும் தலைவர் அர்ஜூன் சம்பத், கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.



அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

''பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரும், புகழ் பெற்ற முருக பக்தருமான சாண்டோ எம்.ஏ.சின்னப்ப தேவர் கோவை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். அவர், மருதமலை கோவிலுக்கு சரியான பாதை இல்லாத காலத்தில் மலைப்பாதையில் படிக்கட்டுக்களை அமைத்து மருதமலை முருகன் பக்தர்கள் எளிதாக தரிசிக்கும் வகையில் மிகச்சிறப்பான ஏற்பாடுகளை செய்தவர்.

மேலும், மலைப்பாதையில் பல்வேறு பணிகள் செய்து மக்கள் இளைப்பாறும் வகையில் இளைப்பாறும் மண்டபங்களை சாண்டோ எம்.ஏ.சின்னப்ப தேவர் அமைத்தார்.

இந்த நற்பணிகள் காரணமாக இளைப்பாறும் மண்டபங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் சாண்டோ எம்.ஏ.சின்னப்ப தேவரின் படமும், பெயரும் பொறிக்கப்பட்டிருந்தன.

ஆனால், தற்போது மருதமலை கோவிலில் இந்து அறநிலையத் துறை சார்பில் மராமத்துப் பணிகள் மற்றும் வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்று வருவதால் எம்.ஏ.சின்னப்ப தேவரின் பெயரும், படமும் மறைக்கப்பட்டு வருகிறது.

எனவே, மருதமலை ஆலயம் மற்றும் மலைப்பாதையில் அவரது பெயர் மற்றும் உருவப்படங்களை மீண்டும் பொறிக்கப்பட வேண்டும்'' என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...