மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை பணி இட மாற்றம் செய்யக்கோரி போராட்டம்

கோவை மாவட்டத்தில் தொடக்கப் பள்ளிகளில் நடந்த பருவத் தேர்வுகளுக்கு வினாத்தாள் அச்சடித்ததில் கோவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் காந்திமதி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அவரை உடனடியாக பணி இட மாற்றம் செய்யவேண்டும் என கூறி தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பினை சேர்ந்தவர்கள் டவுன்ஹால் பகுதியில் உள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.



இது குறித்து தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் வின்செண்ட் பால் ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தொடர்ந்து ஆசிரியர் விரோத போக்கை கடைபிடித்து வருகிறார். கல்வித்துறைக்கு கட்டுப்படாமல் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறார். தொடக்க கல்வித்துறை உடனடியாக தலையிட்டு அவரை பணி இடமாற்றம் செய்யவேண்டும்' என்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...