வெப்ப மண்டல தாவர உயிரிகளின் நிலையான பயன்பாடு குறித்து சர்வதேச மாநாடு

அதிகரித்து வரும் ஆற்றல் தேவை மற்றும் படிம எரிபொருட்களின் வேகமான மறைவின் காரணமாக நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களில் இருந்து ஆற்றல் அபிவிருத்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. 

இவற்றை அடிப்படையாகக் கொண்டு வெப்ப மண்டல தாவர உயிரிகளின் நிலையான பயன்பாடு உயிரி செயலூக்கி, உயிரி தயாரிப்பு மற்றும் உயிரி சுத்திகரிப்பு என்னும் சர்வதேச மாநாடு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் வியாழன் (இன்று) மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் ரேடிசான் புளு ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



இம்மாநாட்டிற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் கு.ராமசாமி, அமைப்புச் செயலாளர் முனைவர் உ.சிவகுமார் ஆகியோர் தலைமைதாங்க உள்ளனர்.

இந்த மாநாடானது, சர்வதேச   மற்றும் தேசிய அளவிலான நிபுணர்களைக் கொண்ட அறிவியல் பூர்வமான மன்றத்தினை வழங்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



மாநாட்டின் ஆய்வுப் பகுதிகளாக உயிரி மற்றும் செல்முறை பொறியியல், உயிரி செயலூக்கி மற்றும் தீவிர நொதி, நொதித்தல் மற்றும் வளர்சிதை மாற்ற பொறியியல் மற்றும் உயிரித் தயாரிப்பு உணவு மற்றும் மருந்து ஆகியவை உள்ளன.

இதில், உலக அளவில் 400 பங்கேற்பாளர்கள் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்தியா, ஸ்ரீலங்கா, ரஷ்யா, ஸ்வீடன், அயர்லாந்து மற்றும ஐக்கிய நாடுகளிலிருந்து வரும் பேச்சாளர்கள் வெப்ப மண்டல உயிரிகளின் பயன்பாட்டில் உள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகள் குறித்து பேசவுள்ளனர். 



இந்த சர்வதேச மாநாடானது கல்லூரி, பல்கலைக் கழகம், ஆய்வு நிறுவனம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வரும் இளைய மற்றும் திறமை மிகுந்த ஆய்வாளர்கள் பங்களிப்பதையும், தொடர்புகொள்வதையும் ஊக்குவிக்கிறது.




Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...