சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்த பேருந்துக்கு முறையான ஆவணம் இல்லாததால் பேருந்து சிறைபிடிப்பு

கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் சுற்றுலா செல்வதற்காக கேரளா சொகுசு பேருந்தை ஏற்பாடு செய்த நிலையில் வரி செலுத்தாதல், உரிய ஆவணங்கள் இல்லை என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீரென அப்பேருந்தை சிறை பிடித்தனர். இதனால், சுற்றுலா செல்ல ஆவலுடன் பேருந்தில் இருந்த மாணவர்கள் இரவு முழுவதும் சாலையில் காத்திருந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி சாலையில் உள்ளது கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இக்கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு இன்ப சுற்றுலா பயணம் என சுமார் 80 பேரிடம் 20 ஆயிரம் ரூபாய் வீதம் வசூல் செய்துள்ளனர். 

சுற்றுலாவிற்காக கேரளாவுக்கு உட்பட்ட பாலக்காட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான பேருந்தை கல்லூரி நிர்வாகத்தினர் வாடகைக்கு எடுத்துள்ளனர். 

இதைத்தொடர்ந்து, புதனன்று இரவு 15 நாட்கள் சுற்றுலா என இரு கேரளா சொகுசு பேருந்துகள் கல்லூரிக்கு வந்ததையடுத்து  காத்திருந்த மாணவர்கள் அனைவரும் ஆவலுடன் ஏறியுள்ளனர். 

இந்நிலையில், சற்றும் எதிர்பாராத விதமாக வந்த வட்டாரப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் பேருந்தின் ஆவணங்களை ஆய்வு செய்ததில் இதுவரை முறையான ஆவணங்கள், பர்மிட் பணம் எதுவும் செலுத்தவில்லை என்று பேருந்தை சிறைபிடித்ததையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

சுற்றுலா போகிறோம் என்ற கனவில் இருந்த மாணவ மாணவிகள் பேருந்து இல்லை என்ற ஏக்கத்தில் கவலை அடைந்து சோகத்துடனே காணப்பட்டனர். 

தமிழக- கேரளா எல்லையான எட்டிமடை உள்ளிட்ட பல பகுதியில் கேரளாவில் இருந்து வரும் மருத்துவக் கழிவுகளை கொட்டி வரும் நிலையில் தற்போது முறையான ஆவணங்கள் இன்றி சொகுசு பேருந்துகளையும் இயக்கி வருவது பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...