மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கிகளுக்கு பணம் வழங்காத மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கோவை தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பணம் வழங்காததால் கூட்டுறவு வங்கிகள் மேல் விவசாயிகளுக்கு உள்ள நம்பிக்கை குறைய வாய்ப்பு உள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர்.



தமிழக அரசு கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகள் இயங்கப்பட்டு வருகிறது, கோவை மாவட்டத்தை பொருத்தவரை 276 கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் பெரும்பாலும் கிராமப்புற விவசாயிகளே அதிக பயனாளர்களாக உள்ளனர். இந்நிலையில் கடந்த 9ம் தேதி முதல் 500-1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் மாநில அரசின் கீழ் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மத்திய வங்கியில் செலுத்திய பணத்தை மீண்டும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கூட்டுறவு வங்கிகளில் பணம் செலுத்திய விவசாயிகள் பணத்தை எடுக்க முடியாமலும், விவசாய நகை கடன், உள்ளிட்ட கடன்களை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போதுமான அளவு பெரிய தொகை வழங்க முடியாது என மத்திய வங்கி தெரிவித்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் உடனடியாக கூட்டுறவு வங்கி செலுத்திய பணத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் கோவையில் உள்ள தலைமை அலுவலகத்தில் 300 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...