ரூபாய் நோட்டுகளில் கடவுள்களின் படங்கள் இடம்பெற வேண்டும் - இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்


பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை நிகழ்த்திய உரையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் வங்கிகளில் சென்று பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும், கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவளிக்குமாறும் தெரிவித்தார்.



பிரதமரின் இந்த திட்டத்தை வரவேற்கும் வகையில் கோவையில் இந்து மக்கள் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து அக்கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பிரதமர் இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளார். தமிழக மக்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏழை மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர். பாகிஸ்தானில் அச்சாகும் கள்ள நோட்டுகளையும், இந்தியாவில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தையும் மீட்கும் முயற்சி. மோடி அரசின் இந்த முயற்சி மூலம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. இதை விரும்பாத சக்திகள் பல அவதூறுகளை பரப்பி வருகின்றனர். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் சுண்டல் மடிப்பத் போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இது அரசை அவமதிக்கும் செயல். அனைவரும் இத்திட்டத்தை வரவேற்போம். சிரமங்களை மக்கள் பொறுத்துக்கொண்டு எல்லோரும் இணைந்து அரசை வலுப்படுத்துவோம்.



இந்தியாவின் அனைத்து தேசிய தலைவர்களின் புகைப்படமும் ரூபாய் நோட்டுகளில் இடம் பெற வேண்டும். லட்சுமி,விநாயகர் போன்ற கடவுள்களில் படமும் இடம்பெற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...