கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அனைத்து பணிகளையும் நேரில் ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களுக்கு வழிகாட்டினார். தினசரி சுகாதார பராமரிப்பு உறுதி செய்யப்பட்டது.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் சுகாதார மேம்பாடு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அனைத்து பணிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்து வழிகாட்டினார்.



ரங்கம்மாள் கோயில் வீதி பகுதியில் DBC பணியாளர் மற்றும் RR டீம் மூலம் டெங்கு கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் கொசு புழுக்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. பின்னர் bleaching பவுடர் போடப்பட்டு, தண்ணீர் தொட்டிக்கு abate மருந்து ஊற்றப்பட்டது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் வார்டு ஆய்வாளர் பாஸ்கர் உடன் இருந்தார்.



பெருமாள் கோயில் வீதி பகுதியில் இயங்கி வரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அங்கன்வாடி மையத்தை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்தார். குழந்தைகள் வருகை பதிவேடு மற்றும் சமையலறை ஆய்வு செய்யப்பட்டன. இதில் அங்கன்வாடி ஊழியர்களும் உடன் இருந்தனர். குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார பராமரிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டது.



ஆவாரம்பாளையம் பிரதான சாலையில் ஆசை பேக்கரி முதல் மகாலட்சுமி கோயில் வரை சாலையோரத்தில் உள்ள மரக்குப்பைகள் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு, மரக்குப்பைகள் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களிடம் வலியுறுத்தினார்.



துரைசாமி நாயுடு லேஅவுட் பகுதியில் சாலையோரத்தில் உள்ள குப்பைகள் மற்றும் சாக்கடை மண்கள் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இதை நேரில் ஆய்வு செய்து, சாலையோரத்தில் உள்ள குப்பைகளை தினசரி சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். குடியிருப்பு பகுதிகளில் தினசரி சுகாதார பராமரிப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினார்.



பிளாக் மாரியம்மன் கோயில் வீதி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய மழை நீர் வடிகால் அமைப்பதற்கான ஆய்வு பணி நடைபெற்றது. வார்டு AE குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதில் 27வது வார்டு மாமன்ற உறுப்பினர் அம்பிகா தனபால் உடன் இருந்தார். மழைக்கால வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.


Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...