இந்திய விமானப் படையின் சார்பில் இந்துஸ்தான் கல்லூரியில் கண்காட்சி நிகழ்ச்சி


இந்திய விமானப் படையின் சார்பல் "தி கார்டியன்ஸ் ஆப் தி ஸ்கை" என்ற கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவையில் அமைந்துள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், இந்திய விமானப் படையில் ஆட்கள் தேர்வு முறை, அதில் சேர்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 



இதனைத்தொடர்ந்து, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மண்டலம், அனுபவம் மற்றும் தகவல் மண்டலம் உள்ளிட்டவை குறித்து மாணவர்களுக்கு செய்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது. இதுகுறித்து விங் கமேண்டர் சங்கீதா நமது நிருபரிடம் கூறியதாவது:-

இந்நிகழ்ச்சி நடத்தியதற்கான முக்கிய நோக்கம் மாணவ, மாணவிகளிடையே இந்திய விமானப்படையின் மீதுள்ள ஆர்வத்தை தூண்டவும், ஊக்குவிப்பதுமாகும். இதுகுறித்த முழுமையான விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அனைத்துத் தரப்பினரிடமும் இதனைக் கொண்டுசேர்க்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.



இதைத்தொடர்ந்து, மாணவர்கள், விமானப் படையில் சேர்வதற்கான தேர்வு முறைகள், தகுதி, விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டனர். பின், இந்திய விமானப் படையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விமானப் போக்குவரத்து உள்ளிட்டவை அடங்கிய பேருந்தினை பார்வையிட்டனர். இதில், விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கருவி, உபகரணம், மேற்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்டவைகள் கண்காட்சிப் படுத்தப்பட்டன.படுத்தப்பட்டன. 



இதனைத்தொடர்ந்து அருகில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இந்திய விமானப் படையின் கண்காட்சி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இதன் மூலம் விமானப் படையில் சேர்வதற்கான ஊக்கம் ஏற்பட்டுள்ளது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விமானக் கட்டுப்பாட்டுக் கருவிகளை இயக்கியது நல்ல அனுபவத்தை ஏற்படுத்தியது என்றனர்.



இந்நிகழ்ச்சியில், விமானப்படை நிர்வாகக் கல்லூரி ஏர் விங் கமேன்டர் பி.கனேசன், அணித் தலைவர் கல்பனா குமாரி, பெங்களுரில் இருந்து அணித் தலைவர் நிசாந்த் தீக்சித், விமானப்படை நிர்வாகக் கல்லூரி இளைஞர் வாரண்ட் அதிகாரி சாகு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...