தீவிபத்தில் புதுப்பெண் உட்பட இரு பெண்கள் பலி

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி வசந்தா (22). இவர்களுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி தனது வீட்டில் உள்ள மண்ணெண்னை அடுப்பை வசந்தா பற்ற வைக்க முயன்றார். எதிர்பாராதவிதமாக தீ அவர் மீது பரவியது. அவரின் கூச்சலை கேட்ட அக்கம்பக்கத்தினர் வசந்தாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வசந்தா இன்று காலை பலியானார். இது குறித்து வழக்கு பதிந்த போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மற்றொரு சம்பவம்

கோவை கண்ணப்ப நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி சுகந்தி (37). சம்பவத்தன்று சுகந்தி தனது வீட்டில் இருந்த மண்ணெண்னை அடுப்பை பற்றவைக்கும் போது, அவர் மீது  தீ பரவியது. தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று மாலை உயிரிழந்தார். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...

ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம்...

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சு...

இரும்பொரை துணை மின்நிலையத்தில் இன்று மின்தடை

இரும்பொரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இரும்பொரை, பெத்...

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை

கோவை பீடம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுவதால...