ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு அணிக்கு பெருமை சேர்த்த கோவை வீரர்கள்..!

உஸ்பெகிஸ்தான் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்ற ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் வென்றது. கோவையைச் சேர்ந்த வீராங்கனை ஹாசினி மற்றும் வீரர் பிரனேஸ் ஆகியோர் ‘டீம் ரிலே’ போட்டியில் அணியின் சார்பில் விளையாடி பதக்க வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.


கோவை: உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் நடைபெற்று வரும் ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026 போட்டியில், தமிழ்நாடு அணியைச் சேர்ந்த கோவை வீரர், வீராங்கனை வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இவர்கள், சர்வதேச அரங்கில் தமிழகத்தின் விளையாட்டு திறமையை நிரூபித்துள்ளனர்.


ஜூன் 21 முதல் 28 வரை உஸ்பெகிஸ்தான் நாட்டின் தாஷ்கண்ட் நகரில் ‘ஆசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் 2026’ போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இந்தியா உட்பட 21 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு பிரிவுகளில் கடுமையான போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ‘டீம் ரிலே’ பிரிவில் தமிழ்நாடு அணி சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது.


நேற்று நடைபெற்ற டீம் ரிலே போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கிய தமிழ்நாடு அணி வெண்கலப் பதக்கம் வென்று பெருமை சேர்த்தது. இதில், கோவையைச் சேர்ந்த வீராங்கனை ஹாசினி மற்றும் வீரர் பிரனேஸ் ஆகியோர் அணியின் சார்பில் விளையாடி பதக்க வெற்றியில் முக்கிய பங்காற்றினர். இருவரும் சிறப்பான ஒருங்கிணைப்புடன் போட்டியிட்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.




வீராங்கனை ஹாசினி இதுவரை 15 தேசிய பதக்கங்களையும், 2 சர்வதேச பதக்கங்களையும் வென்று சாதனை படைத்துள்ளார். இளம் வயதிலேயே மவுண்டன் பைக்கில் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் இவர், தொடர்ந்து சிறப்பான செயல்திறனை காட்டி வருகிறார். அதேபோல் வீரர் பிரனேஸ் 9 தேசிய பதக்கங்களையும், 4 சர்வதேச பதக்கங்களையும் பெற்று தனது திறமையை நிரூபித்துள்ளார். இருவரும் கடந்த பல ஆண்டுகளாக மவுண்டன் பைக்கில் தொடர்ச்சியான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.


தமிழ்நாடு அரசின் STAD (Sports Development Authority of Tamil Nadu) பிரிவு வீரர்களுக்கு தேவையான பயணச் செலவுகள், உணவு, தங்குமிட வசதிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளை செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது.




வெண்கலப் பதக்கம் வென்ற ஹாசினி மற்றும் ப்ரனேஸுக்கு தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன், கோவை சைக்கிளிங் அசோசியேஷன், பெற்றோர், பயிற்சியாளர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...