தீவிபத்தில் புதுப்பெண் உட்பட இரு பெண்கள் பலி

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி வசந்தா (22). இவர்களுக்கு கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி தனது வீட்டில் உள்ள மண்ணெண்னை அடுப்பை வசந்தா பற்ற வைக்க முயன்றார். எதிர்பாராதவிதமாக தீ அவர் மீது பரவியது. அவரின் கூச்சலை கேட்ட அக்கம்பக்கத்தினர் வசந்தாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வசந்தா இன்று காலை பலியானார். இது குறித்து வழக்கு பதிந்த போத்தனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

மற்றொரு சம்பவம்

கோவை கண்ணப்ப நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவரது மனைவி சுகந்தி (37). சம்பவத்தன்று சுகந்தி தனது வீட்டில் இருந்த மண்ணெண்னை அடுப்பை பற்றவைக்கும் போது, அவர் மீது  தீ பரவியது. தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று மாலை உயிரிழந்தார். இது குறித்து ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...

கோவை சீத்தாலட்சுமி நகர்புற சுகாதார நிலையத்தில் இலவச டயாலிசிஸ் மையம் - மாநகராட்சி ஆணையர் தகவல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் சீத்தாலட்சுமி அரசு நகர்புற சுகாதார நிலையத்தில் தனியார் பங்களிப்புடன் 10 டயாலிசிஸ்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி–துடியலூர் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவ...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை தீவிரமடைந...

40 ஆண்டு கால TNHB நில கையகப்படுத்தல் பிரச்சனை: விவசாயிகள் சங்கம் குறைதீர்ப்பு நாளில் மனு

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நில ஆர்ஜித நடவடிக்கைகளால் 40 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வரும் சிறு, குறு விவசாயிகள் மற்ற...