கோவை தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக ஈரானிய மாணவர்கள் புகார்

கோவையில் மருத்துவ படிப்பிற்கு 2 கோடி ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு அதனை திரும்ப தராமல் ஏமாற்றுவதாக கோவையில் உள்ள தனியார் கல்லூரி மீது ஈரானிய மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை திருச்சி சாலை கண்ணம்பாளையம் பகுதியில் ஆர்.வி.எஸ் கல்விக் குழுமங்களுக்கு சொந்தமான பல் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், ஈரான் நாட்டு மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், சுமார் 20 கோடி ரூபாய் வரை தங்களிடம் பல் மருத்துவ படிப்பிற்காக ஆர்விஎஸ் கல்லூரி நிர்வாகம் பெற்றுக்கொண்டது. ஆனால் கல்லூரிக்கு அங்கீகாரம் அளித்துள்ள தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் தங்களை நீக்கியதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து தங்களது பணத்தை திரும்பத் தருமாறு கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டோம். ஆனால், நிர்வாகம் பணத்தை திரும்பத் தராமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் தங்களது கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்".

இவ்வாறு அந்த மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

Newsletter

விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாள...

கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்கள் நியமனம்

கோவை மாவட்டத்திலுள்ள பல்வேறு நீதிமன்றங்களில் அரசு தரப்பில் ஆஜராக 20 தற்காலிக அரசு வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமித்துள்ளத...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...