விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்றவர் கைது - கோவை குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

அரசு வழங்கிய பட்டியலினருக்கான விவசாய நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்து ஏமாற்றியதாக எழுந்த புகாரில், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மணி (65) என்பவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை சூலூர் சிவகாமி நகரைச் சேர்ந்த சந்திரசேகர் (48), கடந்த 2010-ஆம் ஆண்டு தனது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருடன் இணைந்து, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த மணி (65) என்பவரிடம் இருந்து பொள்ளாச்சி அருகே சோலனூரில் உள்ள 97 மனைகளை வாங்கியுள்ளார்.

பின்னர், அந்த மனைகள் பட்டியலினத்தைச் சேர்ந்த நிலமற்ற விவசாயிகளுக்கு அரசு வழங்கப்பட்ட விவசாய நிலங்கள் என்பதும், நில உரிமையாளர்களை ஏமாற்றி மணி அவற்றை விற்பனை செய்திருந்ததும் சந்திரசேகருக்கு தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மணியிடம் கேட்டபோது, அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்து நிலத்தை விரைவில் பத்திரப்பதிவு செய்து தருவதாகக் கூறியதுடன், போலி ஆவணங்கள் மூலம் பத்திரங்களையும் தயாரித்து வழங்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, பத்திரங்கள் கிடைத்ததைத் தொடர்ந்து சந்திரசேகர் வாங்கிய நிலத்தில் வீடு கட்டும் பணியைத் தொடங்கியுள்ளார். அப்போது, கிராம நிர்வாக அலுவலர் கட்டுமானப் பணியை நிறுத்தி, இது விவசாய நிலம், வீடு கட்ட அனுமதி இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதன்பின்பு தான் மணி அவரைஏமாற்றியது சந்திரசேகருக்கு தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, போலி ஆவணங்கள் தயாரித்து பட்டியலினருக்கான விவசாய நிலத்தை விற்றதாக குற்றம்சாட்டப்பட்ட மணி என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் மேலும் தொடர்புடைய நபர்கள் உள்ளனரா என்பது குறித்தும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...

மது போதையில் தகராறு: கோவையில் பெயிண்டர் கொலை; சக தொழிலாளி கைது

கோவை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் அருகே, கட்டிடப் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்த இருவர் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில...

கோவையில் அனுமதியின்றி மரம் வெட்டிய இருவருக்கு ரூ.2.10 லட்சம் அபராதம்

கோவை வெரைட்டி ஹால் மற்றும் குனியமுத்தூரில் அரசு அனுமதியின்றி மரங்களை வெட்டிய இரண்டு தனித்தனி சம்பவங்களில் மொத்தம் ரூ.2.1...