கோவை தனியார் கல்லூரியில் மருத்துவ படிப்பிற்கு பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக ஈரானிய மாணவர்கள் புகார்

கோவையில் மருத்துவ படிப்பிற்கு 2 கோடி ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு அதனை திரும்ப தராமல் ஏமாற்றுவதாக கோவையில் உள்ள தனியார் கல்லூரி மீது ஈரானிய மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை திருச்சி சாலை கண்ணம்பாளையம் பகுதியில் ஆர்.வி.எஸ் கல்விக் குழுமங்களுக்கு சொந்தமான பல் மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில், ஈரான் நாட்டு மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், சுமார் 20 கோடி ரூபாய் வரை தங்களிடம் பல் மருத்துவ படிப்பிற்காக ஆர்விஎஸ் கல்லூரி நிர்வாகம் பெற்றுக்கொண்டது. ஆனால் கல்லூரிக்கு அங்கீகாரம் அளித்துள்ள தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகம் தங்களை நீக்கியதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து தங்களது பணத்தை திரும்பத் தருமாறு கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டோம். ஆனால், நிர்வாகம் பணத்தை திரும்பத் தராமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் தங்களது கல்வி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தாங்கள் செலுத்திய கட்டணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்".

இவ்வாறு அந்த மாணவர்கள் புகார் அளித்துள்ளனர்.

Newsletter

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...