கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் ஆட்சியரிடம் மனு

கோவை, சிஐடி காலனி சுந்தரம் வீதியில் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையினை அகற்றக் கோரி ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து, ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத்தின் கோவை மாவட்ட துணைத் தலைவர் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:-



சென்னை நீதிமன்ற உத்தரவின்படி வழிபாட்டு தளங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் உள்ள இடங்களில் மதுபானக் கடைகள் அமைக்கக் கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோவை தாமஸ் வீதியில் மதுக்கடை (எண் 1711) கோவிலுக்கு அருகாமையில் செயல்பட்டு வருகிறது. 

கோவை டி.கே.மார்க்கெட் பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வரும் நிலையில் தற்போது இதன் அருகிலேயே புதிய மதுக்கடை திறந்திருப்பது அப்பகுதி பெண்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.



எனவே, இப்பகுதி குடியிருப்புவாசிகளின் நலன்கருதியும், பெண்களின் பாதுகாப்பு கருதியும் உடனடியாக அந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...