கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் ஆட்சியரிடம் மனு

கோவை, சிஐடி காலனி சுந்தரம் வீதியில் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடையினை அகற்றக் கோரி ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத் சார்பில் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து, ராஷ்ட்ரீய ஹிந்து பரிஷத்தின் கோவை மாவட்ட துணைத் தலைவர் ஆட்சியரிடம் வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது:-



சென்னை நீதிமன்ற உத்தரவின்படி வழிபாட்டு தளங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் உள்ள இடங்களில் மதுபானக் கடைகள் அமைக்கக் கூடாது என்ற உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோவை தாமஸ் வீதியில் மதுக்கடை (எண் 1711) கோவிலுக்கு அருகாமையில் செயல்பட்டு வருகிறது. 

கோவை டி.கே.மார்க்கெட் பகுதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வரும் நிலையில் தற்போது இதன் அருகிலேயே புதிய மதுக்கடை திறந்திருப்பது அப்பகுதி பெண்கள் மத்தியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.



எனவே, இப்பகுதி குடியிருப்புவாசிகளின் நலன்கருதியும், பெண்களின் பாதுகாப்பு கருதியும் உடனடியாக அந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் விடுத்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளார்.

Newsletter

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் சாலை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகை

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகவான் கார்டன் பகுதியில் கடந்த ஆறு ஆண்டுகளாக சாலை வசதி ஏற்படுத்தாததை கண...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 165 தொழில் முனைவோர்களுக்கு ரூ.83.20 லட்சம் மானியம் வழங்கல்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr.K.சுப்பிரமணியன் மத்திய அரசின் RKVY-RAFTAAR-R-ABI திட்டத்தின் கீழ்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சங்க கால கடம்ப மரத்திலிருந்து மருத்துவ குணமுள்ள கடம்பின் பிரித்தெடுக்கும் முறைக்கு காப்புரிமை

Coimbatore: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்ட கடம்ப மரத்திலிருந்து க...

திருப்பூர்: அமராவதி அணை 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி 32.95 அடி பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை ஜூலை 9ஆம் தேதி இன்று 45.8 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளது. வினாடிக்கு 297 கன அடி நீர்வ...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தென்மேற்கு பருவமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அத...

தேசிய இணைய பரிமாற்ற மையத்தில் இணைய நிர்வாக பயிற்சிக்கு SRIT மாணவி தேர்வு

கோயம்புத்தூர் Sri Ramakrishna Institute of Technology மாணவி ஷாலினி ஏ., புது தில்லி தேசிய இணைய பரிமாற்ற மையம் (NIXI) வழங்...