பூணூல் அணியும் விழாவை தடைசெய்யக் கோரி பன்றிக்கு பூணூல் அணியும் போராட்டம்- கோவையில் தபெதிக அறிவிப்பு


சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் வகையில் ஆவணி அவிட்டம் நாளான்று நடைபெறும் பூணூல் அணியும் விழாவை தடை செய்யக்கோரி, வருகின்ற ஆகஸ்ட் 7 ம் தேதியன்று பன்றிக்கு பூணூல் அணியும் போராட்டம் நடத்தப்படுமென தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் வகையில் ஆவணி அவிட்டம் நாளன்று நடைபெறும் பூணூல் அணியும் விழாவை தடை செய்யக்கோரி வருகின்ற ஆகஸ்ட் 7-ம் தேதியன்று சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி முன்பு பன்றிக்கு பூணூல் அணியும் போராட்டம் நடத்தப்படுமென தீர்மானிக்கப்பட்டது.

மேலும், மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுப்படி வங்கிகளில் தமிழ் மொழியில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கவில்லை எனில் வங்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும், நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி வருகின்ற 27-ம் தேதி திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு எடுக்கப்பட்டது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி, வளர்மதி உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலநிலைக்கேற்ற வேளாண்மை குறித்த சர்வதேச மாநாடு தொடக்கம்

Coimbatore மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "எதிர்கால வேளாண்மை: காலநிலைக்கேற்ற மற்றும் மீள்திறன்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் நடைபெற்ற சாலை அமைப்பு மற்றும் தூய்மை பணிகள்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் புதிய தார் சாலை அமைப்பு, மாஸ் கிளீனிங், சுகாதார மைய ஆய்வு மற்றும் பள்ளி பகுதி...

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கான வருடாந்திர மருத்துவ முகாம் தொடக்கம்

கோவை மாநகராட்சி சீத்தாலட்சுமி நகர்ப்புற முதன்மை சுகாதார நிலையத்தில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்...

சிங்காநல்லூரில் அனுமதியின்றி விளம்பர சுவரொட்டி ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.5,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 61 சிங்காநல்லூர் பகுதியில் தனியார் வணிக வளாகத்தின் விளம்பர சுவரொட்டிகள்...

கோவையில் ஒரே நாளில் 400 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோவை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செல்வபுரம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், இருகூர் பகுதிகளில்...

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில் தடுப்புச் சுவரில் மோதி கார் விபத்து; தனியார் நிறுவன ஊழியர் உயிரிழப்பு

கோவை–மேட்டுப்பாளையம் சாலையில், கட்டுப்பாட்டை இழந்த கார் மேம்பால தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில், கோவையைச் ச...