பூணூல் அணியும் விழாவை தடைசெய்யக் கோரி பன்றிக்கு பூணூல் அணியும் போராட்டம்- கோவையில் தபெதிக அறிவிப்பு


சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் வகையில் ஆவணி அவிட்டம் நாளான்று நடைபெறும் பூணூல் அணியும் விழாவை தடை செய்யக்கோரி, வருகின்ற ஆகஸ்ட் 7 ம் தேதியன்று பன்றிக்கு பூணூல் அணியும் போராட்டம் நடத்தப்படுமென தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்துள்ளது.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழுக் கூட்டம், அவ்வமைப்பின் தலைவர் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை கற்பிக்கும் வகையில் ஆவணி அவிட்டம் நாளன்று நடைபெறும் பூணூல் அணியும் விழாவை தடை செய்யக்கோரி வருகின்ற ஆகஸ்ட் 7-ம் தேதியன்று சென்னை மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி முன்பு பன்றிக்கு பூணூல் அணியும் போராட்டம் நடத்தப்படுமென தீர்மானிக்கப்பட்டது.

மேலும், மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுப்படி வங்கிகளில் தமிழ் மொழியில் விண்ணப்பப் படிவங்கள் வழங்கவில்லை எனில் வங்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் எனவும், நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி வருகின்ற 27-ம் தேதி திமுக நடத்தும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்பது என முடிவு எடுக்கப்பட்டது.

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட திருமுருகன் காந்தி, வளர்மதி உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...