துணை குடியரசு தலைவர் தேர்தலில் கோபால கிருஷ்ண காந்திக்கு வாக்களிக்க வேண்டும் - வைகோ

துணை குடியரசு தலைவர் தேர்தலில் கோபால கிருஷ்ண காந்திக்கு வாக்களிக்க வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.

கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவைக்கு வருகை தந்தார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன் போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென அதிமுக எடுக்கும் முடிவு அவர்களது உரிமை என தெரிவித்தார். ஆனால் துணை குடியரசு தலைவர் தேர்தலில் அரசியல் கட்சியை சாராதவரும், காந்தி, ராஜாஜி பேரனுமான கோபால கிருஷ்ணகாந்தியை பாஜக அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக அதிமுக எம்.பிக்கள் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதற்காக மட்டுமின்றி, முழு தகுதி படைத்தவர் என்ற முறையில் வாக்களிக்க வேண்டுமென்பது எனது வேண்டுகோள் என வைகோ தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...