கர்நாடக சிறையில் சசிகலாவிற்கு சலுகை வழங்கியது குறித்து உயர்மட்ட விசாரணை தேவை- சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு கர்நாடக மாநில சிறையில் சலுகை வழங்கியது குறித்தும், அதற்கு லஞ்சம் பெற்றது குறித்தும் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிடப்பட வேண்டும் என சிபிஐ கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஞானையா கடந்த சனிக்கிழமை காலமானார். வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் வருகைக்காக உடல் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று கோவை மாவட்ட கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில் ஞானையா உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் ஞானையா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக செய்தியாளர்கள் மத்தியில் தேசிய செயலாளர் டி.ராஜா பேட்டியளித்ததாவது:-

வாழ்நாள் முழுவதும் போராளியாகவே இருந்தவர் ஞானையா. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்கு பெரும் பாடுபட்டவர். தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்து கட்டுரைகள் எழுதியவர். மூத்த தலைவர் ஞானையா மரணம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு.

கர்நாடக மாநில சிறையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சலுகைகள் வழங்கியது குறித்தும் அதற்கு லஞ்சம் பெற்றது குறித்தும் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிடப்பட வேண்டும்.

குடியரசுத் துணை தலைவராக நிறுத்தப்பட்டுள்ள கோபால் கிருஷ்ண காந்தியை, நாட்டின் எதிர்காலம் கருதி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்வு செய்ய வேண்டும். சென்னையில் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டிக்கத்தக்கது. சமீப காலமாக இந்துத்துவ அமைப்புகள் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. சென்னை துறைமுகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை எதிர்த்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குரல்கொடுக்கும். 

சென்னையில் இருக்கும் செம்மொழி மையத்தை இடமாற்றம் செய்வது என்ற மத்திய அரசின் நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த முயற்சியையும் மத்திய அரசு கைவிட வேண்டும். 

இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...