கர்நாடக சிறையில் சசிகலாவிற்கு சலுகை வழங்கியது குறித்து உயர்மட்ட விசாரணை தேவை- சிபிஐ தேசிய செயலாளர் டி.ராஜா

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு கர்நாடக மாநில சிறையில் சலுகை வழங்கியது குறித்தும், அதற்கு லஞ்சம் பெற்றது குறித்தும் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிடப்பட வேண்டும் என சிபிஐ கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஞானையா கடந்த சனிக்கிழமை காலமானார். வெளிநாட்டில் இருந்து உறவினர்கள் வருகைக்காக உடல் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், இன்று கோவை மாவட்ட கட்சி அலுவலகமான ஜீவா இல்லத்தில் ஞானையா உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் ஞானையா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். முன்னதாக செய்தியாளர்கள் மத்தியில் தேசிய செயலாளர் டி.ராஜா பேட்டியளித்ததாவது:-

வாழ்நாள் முழுவதும் போராளியாகவே இருந்தவர் ஞானையா. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சிக்கு பெரும் பாடுபட்டவர். தத்துவார்த்த பிரச்சனைகள் குறித்து கட்டுரைகள் எழுதியவர். மூத்த தலைவர் ஞானையா மரணம் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட பெரிய இழப்பு.

கர்நாடக மாநில சிறையில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு சிறையில் சலுகைகள் வழங்கியது குறித்தும் அதற்கு லஞ்சம் பெற்றது குறித்தும் உயர்மட்ட விசாரணைக்கு உத்திரவிடப்பட வேண்டும்.

குடியரசுத் துணை தலைவராக நிறுத்தப்பட்டுள்ள கோபால் கிருஷ்ண காந்தியை, நாட்டின் எதிர்காலம் கருதி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்வு செய்ய வேண்டும். சென்னையில் காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது கண்டிக்கத்தக்கது. சமீப காலமாக இந்துத்துவ அமைப்புகள் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. சென்னை துறைமுகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை எதிர்த்து நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குரல்கொடுக்கும். 

சென்னையில் இருக்கும் செம்மொழி மையத்தை இடமாற்றம் செய்வது என்ற மத்திய அரசின் நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த முயற்சியையும் மத்திய அரசு கைவிட வேண்டும். 

இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...