வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் முறைகேடுகள்: 6 ஆயிரம் என்.ஜி.ஓ-க்களின் உரிமம் ரத்து செய்யப்படுமா?

வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெரும் வகையில் இந்தியாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளன.

நன்கொடை பெறுவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதை அறிந்த மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து தன்னார்வ அமைப்புகள் நிதி உதவி பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டது. மேலும், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக வரவு- செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் இருப்பதை உள்துறை அமைச்சகம் கண்டறிந்தது. இதையடுத்து கடந்த 2011-2015  ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்குகளை கடந்த மே மாத இறுதிக்குள் சமர்பிக்குமாறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

ஆனால், இது வரை 5 ஆயிரத்து 922 தன்னார்வ அமைப்புகள் தங்கள் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து, எப்ஆர்சிஏ (Foreign Contribution Regulation Act) விதியின் படி ‘உங்கள் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?’ என்ற கேள்வியையும் உள்துறை அமைச்சகம் எழுப்பியுள்ளது.

இதற்கு வரும் 23ம் தேதிக்குள் பதில் அளிக்காத தன்னார்வ அமைப்புகளின் வெளிநாட்டு நன்கொடை பெறும் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...