வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் முறைகேடுகள்: 6 ஆயிரம் என்.ஜி.ஓ-க்களின் உரிமம் ரத்து செய்யப்படுமா?

வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெரும் வகையில் இந்தியாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளன.

நன்கொடை பெறுவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதை அறிந்த மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து தன்னார்வ அமைப்புகள் நிதி உதவி பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டது. மேலும், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்புகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக வரவு- செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் இருப்பதை உள்துறை அமைச்சகம் கண்டறிந்தது. இதையடுத்து கடந்த 2011-2015  ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்குகளை கடந்த மே மாத இறுதிக்குள் சமர்பிக்குமாறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

ஆனால், இது வரை 5 ஆயிரத்து 922 தன்னார்வ அமைப்புகள் தங்கள் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து, எப்ஆர்சிஏ (Foreign Contribution Regulation Act) விதியின் படி ‘உங்கள் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?’ என்ற கேள்வியையும் உள்துறை அமைச்சகம் எழுப்பியுள்ளது.

இதற்கு வரும் 23ம் தேதிக்குள் பதில் அளிக்காத தன்னார்வ அமைப்புகளின் வெளிநாட்டு நன்கொடை பெறும் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...