வீட்டுமனை பட்டா கேட்டு சாட்டையடித்தபடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நாடோடிகள்

கோவை காந்திபார்க் பகுதியில் சாட்டையடித்து பிழைப்பு நடத்தும் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் சாலையோரம் வசித்து வருகின்றனர்.



இவர்கள் அப்பகுதியில் உள்ள பிளாட்பாரம் மற்றும் சுற்று பகுதிகளில் வசித்து வரும் நிலையில் தாங்கள் குடிசை அமைத்து வாழ ஏதாவது ஒரு இடத்தில் மாவட்ட நிர்வாகம் இடம் வழங்க வேண்டும் என பலமுறை மனு அளித்துள்ளனர்.



இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு குடும்பம் சகிதமாக வந்தவர்கள் நுழைவுவாயில் முன்பு சாட்டை அடித்து ஆடி உடனடியாக ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- மழை மற்றும் வெயில் காலங்களில் தாங்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். பெண்கள் குளிப்பதற்கோ உடை மாற்றுவதற்கோ மறைவிடம் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர். தங்களுக்கு பட்டா ஒதுக்கீடு செய்து இருப்பிடத்திற்கு வழி செய்து தர வேண்டும். 

மேலும் தங்களுடைய வருங்கால சந்ததிகள் தாங்கள் செய்து வரும் சாட்டியடியை கைவிட்டு கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும். தங்களது சமூகத்தில் முன்னோடியாக ஒரு இளைஞர் கல்லூரி படிப்பை முடித்து தற்போது அரசு தேர்விற்கு பயின்று வருகிறார். தங்களுடைய சமூகம் மிகவும் பிந்தங்கிய நிலையில் உள்ள நிலையில் பிளாட்பாரங்களில் தங்குவதால் மற்றவர்கள் தங்களை ஏளனமாக பார்ப்பது வேதனையளிக்கிறது என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...