வீட்டுமனை பட்டா கேட்டு சாட்டையடித்தபடி வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த நாடோடிகள்

கோவை காந்திபார்க் பகுதியில் சாட்டையடித்து பிழைப்பு நடத்தும் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அப்பகுதியில் சாலையோரம் வசித்து வருகின்றனர்.



இவர்கள் அப்பகுதியில் உள்ள பிளாட்பாரம் மற்றும் சுற்று பகுதிகளில் வசித்து வரும் நிலையில் தாங்கள் குடிசை அமைத்து வாழ ஏதாவது ஒரு இடத்தில் மாவட்ட நிர்வாகம் இடம் வழங்க வேண்டும் என பலமுறை மனு அளித்துள்ளனர்.



இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகதிற்கு குடும்பம் சகிதமாக வந்தவர்கள் நுழைவுவாயில் முன்பு சாட்டை அடித்து ஆடி உடனடியாக ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- மழை மற்றும் வெயில் காலங்களில் தாங்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறோம். பெண்கள் குளிப்பதற்கோ உடை மாற்றுவதற்கோ மறைவிடம் இல்லாமல் அவதிபட்டு வருகின்றனர். தங்களுக்கு பட்டா ஒதுக்கீடு செய்து இருப்பிடத்திற்கு வழி செய்து தர வேண்டும். 

மேலும் தங்களுடைய வருங்கால சந்ததிகள் தாங்கள் செய்து வரும் சாட்டியடியை கைவிட்டு கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும். தங்களது சமூகத்தில் முன்னோடியாக ஒரு இளைஞர் கல்லூரி படிப்பை முடித்து தற்போது அரசு தேர்விற்கு பயின்று வருகிறார். தங்களுடைய சமூகம் மிகவும் பிந்தங்கிய நிலையில் உள்ள நிலையில் பிளாட்பாரங்களில் தங்குவதால் மற்றவர்கள் தங்களை ஏளனமாக பார்ப்பது வேதனையளிக்கிறது என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...