நிர்மலா கலைக் கல்லூரியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் முகாம் துவக்கம்

கோவை மாவட்டம் நிர்மலா அறிவியல் கலைக் கல்லூரியில் இன்று (ஜூலை 6) வாக்காளர் பட்டியலில் 18 வயது முதல் 21 வயது நிரம்பிய கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் இம்முகாமினை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-



இந்திய தேர்தல் ஆணையம் தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிகளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் பணிகளை கடந்த ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து ஜூலை 31-ஆம் தேதி வரை சிறப்புப்பணி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் இந்த சிறப்புப்பணியை அனைத்து மாநிலங்களிலும் தொடங்கி “எந்த ஒரு வாக்காளரும் விடுப்பட்டுவிடக் கூடாது” என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் கருப்பொருளுக்கிணங்க அதிகளவில் இளைய வாக்காளர்களை குறிப்பாக 18-21 வயதுக் குழுமத்ததைச்சார்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தற்போது நடைபெறும் தொடர் திருத்தக் காலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இம் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து 31-ஆம் தேதி வரை நடைபெறும் இச்சிறப்புப்பணியின்போது வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவுலகங்களில் படிவங்ளைச் சமர்ப்பிக்கலாம். அஞ்சல் மூலமும் படிவங்களை அனுப்பலாம். www.electons.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலமும், இ-சேவை மையங்களின் மூலமும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

சிறப்புப்பணியில் 09.07.2017 மற்றும் 23.07.2017 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து நிரப்பப்பட படிவங்களை பெறுவர்.

இச்சிறப்புப்பணியின்போது, இறந்த வாக்காளர்களின் பெயர்களை பட்டியளிலிருந்து நீக்கும் பணியும் நடைபெறவுள்ளது. இறப்புப்பதிவு செய்யப்பட்ட விவரங்கள் உள்ளாட்சி அலுவலகங்களிலிருந்து பெறப்பட்டு அதனடிப்படையில் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் பட்டியல்களிலிருந்து  இச்சிறப்புப்பணியின்போது நீக்கப்படும். இந்த அறிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், மாநகராட்சி உதவி ஆணையர்கள் ரவிக்குமார், அண்ணாதுரை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...