அரசியல் ரீதியான கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல் சிபிஎம் அலுவலகம் மீது தாக்குதல்- விஎச்பி செயலாளர் கைது

கோவை காந்திபுரத்தில் சிபிஎம் கட்சி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு கிளை பிரிவான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை மாவட்டம், காந்திபுரம் 100 அடி சாலையில் மார்க்சிஸ்ட்சி கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மீது கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதியன்று அதிகாலை மர்மநபர்கள் இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிச்சென்றனர். அது சிபிஎம் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த கார் மீதும், கட்டிட ஜன்னல் மிதும் விழுந்து வெடித்தது. இதில், பெரிய அளவில் சேதம் இல்லை என்ற போதிலும் சிபிஎம் கட்சியினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, இச்சம்பவம் தொடர்பாக அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சிசிடிவி பதிவுகள் மற்றும் செல்போன் தொலைபேசி உரையாடல் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்ட தனிப்படை பிரிவினர் செவ்வாயன்று (நேற்று) மேட்டுப்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த சரவணக்குமார் என்பவரை கைது செய்தனர்.

மேட்டுப்பாளையத்தில் யோகா பயிற்றுனராக பணியாற்றி வரும் இவர், லண்டனில் மென் பொறியாளராக பணியாற்றியுள்ளார். மேலும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு கிளை பிரிவான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் வடக்கு மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து, விசாரணை மேற்கொள்கையில், அரசியல் ரீதியான கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத நிலையில், சிபிஎம் அலுவலகம் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தி பழிதீர்க்க முடிவு செய்து ஒரு குழுவாக இயக்கியிருப்பதும், அந்த குழுவின் செயல்திட்டத்தின் படியே சிபிஎம் அலுவலம் மீது பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்து பெட்ரோல் குண்டு வீசிய சரவணக்குமாரை செவ்வாயன்று இரவே நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் தொடர்ந்து, அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வரும் நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான குறைதீர் முகாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜூலை 10ம் தேதி காலை 10 மணிக்கு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான குறைதீர...

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...